'

காதலர் தினத்தையொட்டி பொலிஸாரினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதனை திங்கட்கிழமை (14 பெப்ரவரி 2022) பத்திரிகை பிரசுரித்துள்ளது.
இன்று காதலர் தினம், உங்களது பிள்ளையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கீழ் இச்செய்தி பிரசுரமாகியுள்ளது.


உலக காதலர் தினம் எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படுவதை யொட்டி, தங்களது பிள்ளைகளை மோசடியாளர்களின் வலைகளுக்குள் சிக்க வாய்ப்புள்ளதாகவும், பிள்ளைகள் வீட்டிலிருந்து வௌியேறுவதாயின் அது தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஹோட்டல் அறைகள், இள வயதினரை கவரும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் போது பிள்ளைகள் பல்வேறு முறைகேடுகளுக்கு உள்ளாவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளதாக உளவுப்பிரிவினரின் தகவல்கள் தெரிவிப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்காக மோசடியாளர்களின் சட்ட விரோத செயல்களை தடுப்பதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் நிறுத்தப்படுவர் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.