'

கல்வி சாரா ஊழியர்களின் தற்காலிக இணைப்பு இடமாற்ற காலம் நீடிக்கப்படுகின்றது



2021 ஆகஸ்ட் 09 ஆம் திகதி கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள விசேட அறிவித்தலின் பிரகாரம், கல்வி சாரா ஊழியர்களின் தற்காலிக இடமாற்ற கால எல்லையானது நீடிக்கப்பட்டுள்ளது.
guruwaraya.lk

தமது நிரந்தர சேவை நிலையத்திலிருந்து , வேறு சேவை நிலையத்தி்றகு தற்காலிக இடமாற்றம் பெற்று, தற்காலிக இடமாற்ற காலம் நிறைவு பெற்றுள்ள கல்வியியற் கல்லூரி, ஆசிரியர் மத்திய நிலைய, ஆசிரியர் கல்லூரி மற்றும் தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் தொடர்பாக, மீண்டும் கல்வி செயற்பாடுகளுக்காக அவர்களின் நிரந்தர சேவை நிலையங்கள் மீள திறக்கப்படும் வரை, அவர்கள் தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள பணியிடத்திலேயே அவர்களது தற்காலிக இணைப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக கருதி சேவையாற்ற வேண்டும்.
guruwaraya.lk

மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக நிரந்தர பணியிடங்கள் திறக்கபட்ட பின்னர், அவர்கள் தம் நிரந்தர சேவை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். தற்போதுள்ள கொவிட் நிலைமைகளின் கீழ் அரச பணியினை தொடர்ந்து கொண்டு செல்லுமுகமாக அரசு வௌியிடும் கொள்கை மற்றும் வழிநடத்தல்களுக்கு ஏற்ப தமது ஊழியர்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப வேலைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.       guruwaraya.lk