உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும், அனைத்து தரங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட அறிவித்தலில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், புதிய அறிவித்தலின் படி அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் 07, மார்ச் 2022 பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Plugin