'

பாடசாலைகள் மீண்டும் ஒருவாரம் மூடப்படுகின்றது (ஜூலை 11 - ஜூலை 15)


பாடசாலைகள் மீண்டும் ஒரு வாரம் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வுரும் ஜூலை 18 ஆம் திகதி பாடசாலைகள் யாவும் மீள திறக்கப்படும் எனவும் அவ்வறிவித்தல் சுட்டிக் காட்டுகின்றது.

2022.07.08 கல்வி அதிகாரிகள் மற்றும் தொழில்சங்க பிரமுகர்களுடான கலந்துரையாடலின் பின்னர், எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் ஜூலை 11 தொடக்கம் ஜுலை 15 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 18, 2022 மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்