'

ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு உயர்தர பரீட்சைகள் இரண்டு பிற்போடப்பட்டுள்ளது

செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவிருந்த இரண்டு பரீட்சைகளை ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு செப்டம்பர் 4 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு பிற்போட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்தது.

பொது அறிவுப் பரீட்சை  மு,ப. 8.30 - 11.00 வரையும், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பகுதி ii பி.ப. 12.30 - 3.30 வரை நடைபெறும்.
மேலதிக தகவல்களுக்கு 1911 அழைக்கவும்.

-ada derana-