'

குடும்ப நல உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வுகள் பிற்போடப்பட்டுள்ன



குடும்ப நல உத்தியோகத்தர் (Public Health Midwife) கற்கைநெறிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகளை பிற்போடுவது சம்பந்தமாக சுகாதார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.


மீண்டும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.


முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதிகள்
பதுளை 14, 15
மொனராகல 15,
குருநாகல் 14, 15
புத்தளம் 15
கொழும்பு 21
கம்பஹா 21, 22
களுத்துறை 22