'

பல்கலைக்கழக விண்ணப்பத்திற்காக மேலதிக காலம் வழங்கப்படும்



பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க முடியாது போன மாணவர்களுக்கு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சலுகை காலம் வழங்கப்படும் என அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

பயணத்தடை அகற்றப்பட்டதன் பின்னர், மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக காலத்தை வழங்க பல்கலைககழக மாணியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பயணத்தடை காரணமாக விண்ணப்பிக்க முடியாது போன மாணவர்களின் நன்மை கருதி இவ்வேற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.