'

மாணவனின் தற்கொலைக்கான காரணம்



பண்டாரவளையைச் சேர்ந்த 16 வயது மாணவனின் தற்கொலைக்கான காரணம் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மேற்படி மாணவன் தற்கொலை செய்துள்ளார்.

குறித்த சந்தரப்பத்தில் வௌியிடப்பட்ட காரணமாவது, குறித்த மாணவனுக்கு நிகழ்நிலை கற்றலுக்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட தொலைபேசியில் இணைய விளையாட்டுக்களில் அடிமையானதன் காரணமாக ஏற்பட்ட விபரீதம் என்பதாகும். மாணவனின் அறையிலும் அதிகமான ரிலோட் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

மாணவனின் மேற்படி தொலைபேசியானது அன்மையில் பெற்றோருக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

அப்போது பெற்றோர் குறித்த தொலைபேசியை ஆராய்ந்த போது, ஒரு பெண்ணாக நடித்த ஆண் ஒருவர் மேற்படி மாணவனின் நிர்வாண புகைப்படங்களை சூட்சுமமாக பெற்றுக் கொண்டு, அதை முகநூலில் கசியவிடுவதாக கூறி அச்சுறுத்தி பணம் மற்றும் ரீலோட் அட்டைகளை பெற்றுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைக்காக விசேட பொலிஸ் குழுவிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் வௌியான வீடியோ செய்தி (சிங்களத்தில்)