'

ஜூலை 04 தொடக்கம் 08 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை



நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் யாவும் எதிர்வரும் ஜூலை 04, 2022 தொடக்கம் ஜுலை 08 2022 வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு அதிகாரிகள், மகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற ZOOM கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.