2022 ஆம் வருட தேசிய பாடசாலை ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
2021.12.31 ஆம் திகதியன்று சேவைக் காலத்தை நிறைவு செய்தவர்கள் மற்றும் ஆசிரிய இடமாற்ற கடிதங்களைப் பெற்றுக் கொண்ட அனைத்து ஆசிரியர்களும் 2023.06.12 ஆம் திகதியளவில் தமது பணியிடங்களுக்கு சமுகமளித்தல் வேண்டும்.
மேன்முறையீடு செய்ய விரும்பின், கடமை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், அதிபரினூடாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஆசிரிய இடமாற்ற பிரிவுக்கு நேரடியாக சமூகமளிக்க தேவையில்லை. மேன்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
Social Plugin