'

குருதி நன்கொடை வழங்கலுக்கு முன்பதிவு ​செய்தல்




தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், தேசிய குருதி வங்கி மற்றும் சமூக ஊடக மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து குருதி வழங்கக் கூடியவர் தம்மை முன் பதிவு செய்து கொள்வதற்கான மென்பொருள் விருத்தி செய்யப்பட்டுள்ளது.

வயது கட்டுப்பாடின்றி, பிரதேச ரீதியிலான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறைந்தது ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் 60 பேர் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி உலக குருதி நன்கொடை வழங்கும் தினத்தை ஒட்டியதாக மேற்படி செயற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்ய முன்னர் பின்வரும் தகவல்களுக்கு உங்கள் பதிவு "இல்லை" என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • கடந்த ஒரு மாத காலத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் குறிகள் காணப்பட்டதா?
  • உங்களுடைய வீட்டில் காய்ச்சல் இருமல் அறிகுறிகளுடன் உங்கள் வீட்டில் யாரும் இருக்கின்றனரா?
  • கடந்த மாதத்தில் வௌிநாட்டிற்கு சென்று வந்த ஒருவர் உங்கள் வீட்டில் உள்ளனரா?
  • கடந்த மாதத்தில் வௌிநாட்டுக்கு சென்ற ஒருவருடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதா?
  • கடந்த மூன்று மாத காலப்பகுதியில் வௌிநாட்டில் இருந்தீர்களா

மேற்படி வினாக்களுக்கு, விடை இல்லை எனின் பின்வரும் இணைப்பினூடு பதிவு செய்து கொள்ளுங்கள்.