'

தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல்



பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரை (6ம் வகுப்பு நீங்கலாக) வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு தமது விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உரிய பாடசாலைகள் மேற்கொள்ளும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக கல்வி அமைச்சினால் இனி கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது