'

தனியார் துறையில் கடமைபுரிய அரச ஊழியர்களுக்கு 5 வருட சம்பளமற்ற விடுமுறை வழங்க யோசனை


அரச ஊழியர்களுக்கு தனியார் துறையில் கடமை புரிவதற்காக 5 வருட சம்பளமற்ற உள்நாட்டு விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கவனமன் செலுத்தி வருகின்றது.

இது தொடர்பா ஆராய பிரத்தியேக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணபபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

இரண்டு வாரங்களுக்குள் மேற்படி யோசனையை சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மூலம் - தினமின 25 ஜுன் 2022