'

போக்குவரத்து பிரச்சினை காரணமாக கல்வி சாரா ஊழியர்களிக்கான சலுகை



நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 31 அல்லது மீண்டும் குறிப்பிடப்படும் தினம் வரை அவர்களின் கடமை நேரம் 2 மணி வரை மட்டுப்படுத்தப்படுகின்றது.